வவுனியா தோணிக்கல் ஆலடிப் பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்து சென்ற ஆடைத் தொழிற் சாலையில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அக்குடும்பம் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், அக் குடும்பம் தனிமைப் படுத்தப்பட்டுள்ள குறித்த பகுதிக்கு மக்களை செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தோணிக்கல் ஆலடிப் பகுதியில் புகையிரத கடவைக்கு அருகாமையில் சிறிய கடையொன்றினை நடத்தி வரும் குடும்பமொன்றே இவ்வாறு தனிமைப் படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையும் இன்று இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.