2019யில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி இவ் வருடம் (2020) உயர்தரத்தில் கல்வி கற்க விரும்பும் மாணவ/ மாணவிகள் கல்வி அமைச்சில் அனுமதி பெற்ற பின்னரே எந்த ஒரு பாடசாலையிலும் கல்வி பயில முடியும்.
குறித்த மாணவ, மாணவிகள் ஒன்லைன் மூலமாக விண்ணப் படிவங்களை பூரணப்படுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது குறித்த அறிவுரை
– இந்த முறையின் கீழ் ஒரு மாணவர் 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
– ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித் தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
– விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி 2020/06/12
– கல்வி அமைச்சு இந்த விண்ணப்பங்களை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பும்.
– நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டால் உங்கள் சான்றிதழ்கள் மற்றும் பிற உரிய ஆவணங்களுடன் நீங்கள் தோற்ற வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு நீங்கள் தொடர்புக்கான குறியெண்ணை பெறுவீர்கள். (தேவையின் போது அதை பயன்படுத்துங்கள்)
– சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தகவல்களை உள்ளிடும் போது unicode எழுத்தை பயன்படுத்தவும்.
விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்…..>>>>>>