மஹர சிறைச்சலையில் இருந்த சிறைக் கைதிகள் 7 பேர் தப்பியோட மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்ட 7 கைதிகளில் 6 கைதிகள் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதில் ஏறி தப்பிக்க முற்பட்டவேளை, ஏற்பட்ட அமளியில் சிறைக் கைதிகளில் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 38 வயதுடைய நபரென முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் பொலிஸார் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.