Sunday, May 3, 2026
Huis Blog

அச்சுறுத்தல்களுக்கு நாம் அஞ்ச மாட்டோம்; மே தினப் பேச்சுகளுக்கு நாமல் பதிலடி..!

0

யாருடைய வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் மற்றும் யாரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேசிய மக்கள் சக்தியின் பெலவத்த கட்சி அலுவலகமே தீர்மானிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

களனி விகாரையில் நேற்று நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மே தினக் கூட்டங்களில் தொழிலாளர் உரிமைகள் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அரசியல் எதிராளிகளைச் சிறைக்கு அனுப்புவது குறித்தே ஜனாதிபதியும் ஆளும் தரப்பினரும் பேசினார்கள். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் போலியானவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதால், அரசு தற்போது அடக்கு முறையைக் கையாண்டு வருகின்றது. 323 கொள்கலன்கள் விடுவிப்பு குறித்து முறைப்பாடளித்த டான் பிரசாத் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் திறைசேரியின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் உயிரிழந்துள்ளமை சந்தேகத்துக்குரியது. அரசின் ஊழல் மோசடிகளைத் நாம் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவோம்.” – என்றார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு; போக்குவரத்து கட்டணங்களும் உயரும் வாய்ப்பு..!

0

எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து டீசல் விலை அதிகரித்துள்ளதால், பாடசாலைப் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டணத் திருத்தத்தை ஒரு குறிப்பிட்ட சதவீதமாக அதிகரிக்காமல், பெற்றோருடன் கலந்துரையாடி ஓரளவுக்கு உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் டீசல் விலை உயர்த்தப்பட்ட போதும், பெற்றோரின் நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்கவில்லை.

எனினும், தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு இம்முறை ஒரு குறிப்பிட்ட தொகையினால் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையெனில் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வவுனியாவில் கலந்துரையாடல்..!

0

ஈழத் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி, வடகிழக்கு மாகாணங்கள் எங்கும் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான எழுச்சியை வலியுறுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் நடைபெற்றது.

சமூக செயற்பாட்டாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சமயத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.

இத்தீர்மானத்தின் 50வது ஆண்டு பூர்த்தியை எழுச்சியுடன் கொண்டாடுவதற்கும், அதன் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக, வவுனியா மாவட்டத்திற்கான ஏற்பாட்டுக் குழு இன்றைய தினம் முறைப்படி தெரிவு செய்யப்பட்டது. இக் குழுவின் ஒருங்கிணைப்பில், வவுனியா மாவட்டத்தின் கிராமங்கள் தோறும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களை ஒழுங்கு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் மாவட்ட ரீதியான நிர்வாகத் தெரிவுகள் பூர்த்தியடைந்த பின்னர், பொதுக் கலந்துரையாடல் ஒன்றின் மூலம் வடகிழக்கிற்கான ஆரம்ப நிகழ்வுகள் குறித்த மேலதிக விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் தேசிய சைபர் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு அனுமதி..!

0

நாட்டில் தேசிய சைபர் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் கணினி அவசர தயார் நிலை குழு ஆகியவற்றுடன் இணைந்து, சட்ட வரைஞர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று வருவதாக அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால குறிப்பிட்டார்.

எதிர்வரும் 03 மாதங்களில் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்தார்.

வவுனியா வடக்கில் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு..!

0

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எழுச்சிப் பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமரர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு 02.05.2026 இன்று வவுனியா வடக்கில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அந்த வகையில் வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்தைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

இந்நிலையில் ஈகைச்சுடர் ஏற்றலுடன் தொடங்கிய இந்த அஞ்சலி நிகழ்வில், தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு, பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவின் வரலாற்றுக் குறிப்புக்களும் பகிரப்பட்டது. அத்தோடு தேனிசை செல்லப்பா அவர்களது பாடலும் இதன் போது பாடப்பட்டு அவருக்கு இசை அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சுசீலன், தனுசன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தனது மாகாணசபை காலத்தில் தமிழகத்தில் தேனிசைச் செல்லப்பா, செந்தமிழன் சீமான், பழநெடுமாறன், காசி ஆனந்தன், வைகோ போன்ற பல தமிழகத் தலைவர்களைச் சந்தித்த உணர்வுபூர்வமான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

மக்களுக்கு பேரிடி; மே தினப் பரிசாக எரிபொருள் விலை பாரியளவில் அதிகரிப்பு..!

0

இலங்கையில் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

மாற்றப்பட்ட புதிய விலை விபரம்:

பெற்றோல் 92 ஒக்டேன்: ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 410.00 ரூபா ஆகும்.

பெற்றோல் 95 ஒக்டேன் (யூரோ 4): ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 470.00 ரூபா ஆகும்.

ஓட்டோ டீசல்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 392.00 ரூபா ஆகும்.

சூப்பர் டீசல் (4 ஸ்டார்): ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 458.00 ரூபா ஆகும்.

மண்ணெண்ணெய்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 265.00 ரூபா ஆகும்.

இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் இந்த விலை மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

யாழில் 8 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம்; உறவினரான இளைஞன் கைது..!

0

யாழில் 8 வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியிலேயே இந்த சம்பவம் புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.

தாய்வழி உறவினரான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு மோசமான செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

0

மாதாந்த விலை திருத்தத்திற்கு அமைய மே மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், இன்றைய தினம் (மே 01) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பிறகு, சந்தையில் தற்போது நிலவும் விலைகளே தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 382 ரூபாய்க்கும், ஒரு லீட்டர் சூப்பர் டீசல் 443 ரூபாய்க்கும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 255 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடியில் சிறுமி துஸ்பிரயோகம்; 22 வயதுடைய இளைஞர் கைது..!

0

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று(27.04.2026) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சிறுமி தனது வீட்டில் தனிமையில் இருந்த வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னர், இச்சம்பவம் குறித்துத் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டினை அடுத்து துரிதமாகச் செயற்பட்ட காத்தான்குடி பொலிஸார், அதே கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞர் கடந்த 3 வருடங்களாக அச்சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் மேலதிக சிகிச்சைகளுக்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் விபத்துக்குள்ளாகிய தொடருந்து; பரிதாபகரமாக உயிரிழந்த முதியவர்..!

0

வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று(28.04.2026) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்து, தோணிக்கல் ஆலடி தொடருந்து கடவைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போதே குறித்த இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் தொடருந்து பாதையை கடக்க முற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!