தனது தங்கையின் மோதிரத்தை களவெடுத்து அதனை யாழ் நகர்ப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்று விட்டு அந்தப் பணத்தில் தனது காதலிக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான ஐபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளான் யாழ் நகர பகுதியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவன்.
நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த மாணவன் தனது தனது தங்கைக்கு பூப்புனித நீராட்டு விழாவுக்கு உறவினர்களால் அணிவித்த தங்க மோதிரம் ஒன்றை அன்று இரவே தங்கை நித்திரையில் இருக்கும் போது விரலிலிருந்து கழற்றி எடுத்து வைத்துள்ளான்.
அடுத்த நாள் தங்கை உட்பட பெற்றோர் அந்த மோதிரத்தை தேடி அலைந்து சலித்து விட்டார்கள். அதன் பின்னர் அந்த மோதிரத்தை தேடும் பணியை கைவிட்டார்கள்.
கடந்த புதன்கிழமை அவர்களின் வீட்டுக்கு ஒரு பெண்கள் மற்றும் 3 ஆண்கள் அடங்கிய குழு ஒன்று வந்து அவர்களின் 16 வயதான மகனைத் தேடியுள்ளது. சண்டைக்கு ஆயத்தமான நிலையில் வந்திருந்த குறித்த குழுவின் நடவடிக்கைகள் அயலில் வசிக்கும் இளைஞர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னர் அங்கு வாக்குவதாம் ஏற்பட்டுள்ளது. மாணவனின் குடும்பத்தினர் அவனைத் தேடுவதற்கான காரணம் கேட்ட போது தமது உறவினரான மாணவிக்கு மாணவனால் வாங்கிக் கொடுக்கப்பட்ட மிகப் பெறுமதியான ஐபோன் தொடர்பாகவும் அந்த ஐபோனில் காணப்பட்ட மாணவனின் நிர்வாணப் புகைப்படங்கள் தொடர்பாகவும் அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து விளையாட்டு மைதானத்தில் நின்றிருந்த மாணவனை குடும்பத்தினர் அழைத்து வந்து வந்து விசாரணை செய்த போதே தங்கையின் மோதிரத்தை விற்று தனது காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த விடயம் வெளியாகியுள்ளது.
ஐபோன் வாங்கிய மாணவியும் ஐபோனைக் கொடுத்த மாணவனும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் கற்று வந்ததாகவும் அதன் மூலமே இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
மாணவியை தந்தை ரியூசனுக்கு அருகில் இறக்கிவிட்டுச் சென்ற பின் மாணவி ரியூசனுக்குள் நுழைவது போல் நுழைந்து தந்தை வெளியே சென்றவுடன் மாணவியும் ரியூனை விட்டு வெளியேறி மாணவனுடன் சுற்றித் திரிந்த விடயமும் அங்கு அம்பலமாகியுள்ளது.
குறித்த இருவரும் ரியூசனை விட்டு வெளியேறி அந்த ரியூசனுக்கு அருகில் இருந்த நுாலகம் ஒன்றில் பல தடவைகள் சந்தித்துள்ளதாகவும் குறித்த நுாலகத்தில் வேலை செய்யும் ஒருவரும் அவர்களின் செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
பெற்றோரே உங்கள் பிள்ளைகளின் மீது மிகவும் அவதானமாக இருங்கள். இல்லாது விடின் உங்களது பிள்ளை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் எதிர்காலமே சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.












