Saturday, April 11, 2026
Huis Blog

யாழில் தங்கையின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த மாணவன்..!

0

தனது தங்கையின் மோதிரத்தை களவெடுத்து அதனை யாழ் நகர்ப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்று விட்டு அந்தப் பணத்தில் தனது காதலிக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான ஐபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளான் யாழ் நகர பகுதியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவன்.

நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த மாணவன் தனது தனது தங்கைக்கு பூப்புனித நீராட்டு விழாவுக்கு உறவினர்களால் அணிவித்த தங்க மோதிரம் ஒன்றை அன்று இரவே தங்கை நித்திரையில் இருக்கும் போது விரலிலிருந்து கழற்றி எடுத்து வைத்துள்ளான்.

அடுத்த நாள் தங்கை உட்பட பெற்றோர் அந்த மோதிரத்தை தேடி அலைந்து சலித்து விட்டார்கள். அதன் பின்னர் அந்த மோதிரத்தை தேடும் பணியை கைவிட்டார்கள்.

கடந்த புதன்கிழமை அவர்களின் வீட்டுக்கு ஒரு பெண்கள் மற்றும் 3 ஆண்கள் அடங்கிய குழு ஒன்று வந்து அவர்களின் 16 வயதான மகனைத் தேடியுள்ளது. சண்டைக்கு ஆயத்தமான நிலையில் வந்திருந்த குறித்த குழுவின் நடவடிக்கைகள் அயலில் வசிக்கும் இளைஞர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னர் அங்கு வாக்குவதாம் ஏற்பட்டுள்ளது. மாணவனின் குடும்பத்தினர் அவனைத் தேடுவதற்கான காரணம் கேட்ட போது தமது உறவினரான மாணவிக்கு மாணவனால் வாங்கிக் கொடுக்கப்பட்ட மிகப் பெறுமதியான ஐபோன் தொடர்பாகவும் அந்த ஐபோனில் காணப்பட்ட மாணவனின் நிர்வாணப் புகைப்படங்கள் தொடர்பாகவும் அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து விளையாட்டு மைதானத்தில் நின்றிருந்த மாணவனை குடும்பத்தினர் அழைத்து வந்து வந்து விசாரணை செய்த போதே தங்கையின் மோதிரத்தை விற்று தனது காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த விடயம் வெளியாகியுள்ளது.

ஐபோன் வாங்கிய மாணவியும் ஐபோனைக் கொடுத்த மாணவனும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் கற்று வந்ததாகவும் அதன் மூலமே இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

மாணவியை தந்தை ரியூசனுக்கு அருகில் இறக்கிவிட்டுச் சென்ற பின் மாணவி ரியூசனுக்குள் நுழைவது போல் நுழைந்து தந்தை வெளியே சென்றவுடன் மாணவியும் ரியூனை விட்டு வெளியேறி மாணவனுடன் சுற்றித் திரிந்த விடயமும் அங்கு அம்பலமாகியுள்ளது.

குறித்த இருவரும் ரியூசனை விட்டு வெளியேறி அந்த ரியூசனுக்கு அருகில் இருந்த நுாலகம் ஒன்றில் பல தடவைகள் சந்தித்துள்ளதாகவும் குறித்த நுாலகத்தில் வேலை செய்யும் ஒருவரும் அவர்களின் செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பெற்றோரே உங்கள் பிள்ளைகளின் மீது மிகவும் அவதானமாக இருங்கள். இல்லாது விடின் உங்களது பிள்ளை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் எதிர்காலமே சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிரபல பாடசாலையொன்றின் 16 வயதுடைய மாணவர்கள் மது அருந்திய நிலையில் கைது..!

0

பதுளை ஹல்துமுல்ல பகுதியில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, பாடசாலை நேரத்தில் மது அருந்தியதற்காக நேற்று(10) கைது செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் சுமார் 16 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் கடுமையாக நோய் வாய்ப்பட்ட நிலையில் ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கவலைக்கிடமான நிலையில் தியத்தலாவ ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவர் மதுவின் வாசனையை மறைப்பதற்காக ஒரு வாசனைப் பொருளை அருந்திய பின்னர் மது அருந்தியுள்ளார்.

ஹல்துமுல்ல காவல்நிலைய பொறுப்பதிகாரி, சி.ஐ. அசோகா இந்துனில் ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட பாடசாலை முதல்வர் மற்றும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறினார்.

இதற்கிடையில், அப்பகுதி மக்கள் இந்தச் சம்பவம் குறித்து கவலை தெரிவித்தனர்.

தீவுப் பகுதிகளில் இடர் கொடுப்பனவு நிறுத்தம்; விரைவில் வழங்க நடவடிக்கை..!

0

யாழ் நெடுந்தீவு உள்ளிட்ட பின்தங்கிய தீவுப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை வகைப்படுத்தியதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடர் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ இது குறித்துத் தெரிவிக்கையில், மாகாண சபைகளினால் முன்வைக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த வகைப்படுத்தலில் சிக்கல்கள் இருப்பதை அமைச்சு கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வகைப்படுத்தல் செயல்பாட்டில் எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்டறிந்து அதனைச் சரி செய்ய ஒரு விசேட குழு நியமிக்கப்படவுள்ளது.

அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களுக்கு மீண்டும் கொடுப்பனவுகளை வழங்கத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என செயலாளர் உறுதியளித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கு QR தேவை இல்லை..!

0

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 18-ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு QR குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

இத்தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் குறித்த காலப்பகுதியில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க நடைமுறை பின்பற்றபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்ட புத்தகங்கள்; தீபச்செல்வனுக்கு சுங்கப் பிரிவு விடுத்துள்ள அழைப்பு..!

0

தடுத்து வைக்கப்பட்ட தனது நூல்கள் குறித்து கலந்துரையாட சுங்கப் பிரிவு ஆணையாளர் செவாலி அருகொட அழைப்பு விடுத்துள்ளதாக தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

பணி நிமித்தமாக குறித்த கலந்தரையாடலில் கலந்துகொள்ள முடியாமை குறித்து அவருக்கு உடன் தகவல் அனுப்பியதாகவும் இதனால் அடுத்த வாரம் திகதி மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது புத்தகங்களின் விடுவிப்பு தொடர்பாக அரசியல் சலுகை அடிப்படையிலான தீர்வை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் தனது எழுத்துக்களில் நியாயம் இருக்கிறது என்றும் எங்கள் கதைகளை எழுதுகின்ற உரிமை தனக்கு இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இனிவரும் காலத்தில் இத்தகைய பிரச்சினை தனக்கோ, தன்னைப் போன்ற சிறுபான்மை எழுத்தாளர்களுக்கோ ஏற்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புத்தகங்கள் குறித்த தங்கள் சந்தேகங்களை, கேள்விகளை முன்வைக்க இருப்பதாகவும் அவை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் சுங்க ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, மற்றும் கலாசார அமைச்சின் அதிகாரிகளுடன் எழுத்தாளரின் பிரதிநிதி ஒருவருடனும் இச் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி மோசடி; வலுசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்..!

0

மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால் வலுசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், அவருக்காக அரசாங்கம் முன்னின்று வாதிடக் கூடாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக இன்று (10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டின் மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால், இந்த அரசாங்கத்தில் உள்ள 159 உறுப்பினர்களும் இந்த மோசடிக்காக முன்நிற்க முடியாது.

விலைமனு வழங்கப்பட்ட விதம் தவறானது என்று கணக்காய்வாளர் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட விலைமனு மற்றும் அது தொடர்பான விடயங்கள் அனைத்தும் தவறானவை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் நிலக்கரி கொள்வனவு நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த மோசடிகள் காரணமாக நாட்டுக்கு சுமார் 30 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு மிகப்பாரிய திட்டமிட்ட கொள்ளை என அவர் விமர்சித்தார்.

விநியோகஸ்தர்கள் முறையாகப் பதிவு செய்யப்படுவதற்கு முன்னரே அவர்களுக்கு ஏல ஆவணங்கள் (Bidding) வழங்கப்பட்டுள்ளன. கணக்காய்வாளர் நாயகத்தின் ஆலோசனைகளை மீறி, 42 நாட்களாக இருந்த விலைமனுக் காலம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில ஊழல் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயற்படும் வகையில், நிலக்கரியின் கலோரி அளவு (Kilocalories) வேண்டுமென்றே திருத்தப்பட்டுள்ளது. அத்துடன், சட்டமா அதிபரின் இறுதி இணக்கம் கிடைப்பதற்கு முன்னரே இந்த விலை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவசர காலச் சட்ட நீடிப்புக்கு கோடீஸ்வரன் எம்பி கடும் எதிர்ப்பு..!

0

அவசர காலச் சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அத்தியாவசிய சேவைகள் மக்களுக்குத் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும். மக்களுக்கு இதனை வழங்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையாகும். அதற்காக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

தேசிய மக்கள் சக்தியினர் எதிரணியில் இருந்தபோது, அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை எதிர்த்தே வாக்களித்து வந்தனர்.

ஆனால் தற்போது அந்தச் சட்டம் நீடிக்கப்படுகின்றது. எனவே, அந்தச் சட்டம் நீடிக்கப்படுவதை நாம் ஏற்கவில்லை. அதனைக் கடுமையாக எதிர்க்கின்றோம்.” என்றார்.

இந்த விவாதத்தின் இறுதியில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் வழங்கப்பட்டன.

இதற்கமைய, அவசரகாலச் சட்டம் நீடிப்பு தொடர்பான தீர்மானம் 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

செட்டிகுளத்தில் மக்களின் காணிகளில் எல்லைக் கற்களிட்டு வனவள திணைக்களம் அடாவடி..!

0

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முசல்குத்தி பகுதியில் வனவள திணைக்களத்தினால் அடாத்தாக எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள, கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று (06.04.2026) நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் சகிதம் பார்வையிட்டிருந்தார்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே செட்டிகுளம் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் மற்றும் அன்மையில் காணி மற்றும் வனவள அமைச்சர் பங்குபற்றிய கூட்டம் ஆகியவற்றில் பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலைப்படுத்தியிருந்தார்.

அரச அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் கூட அறிவித்தல் வழங்காமல் இந்த காணிகள் வனவள திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

காணிகளை பார்வையிட்ட பின்னர் கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இது தொடர்பில் அரசாங்க அதிபர், வனவள திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோருடன் மீளவும் கலந்துரையாடுவதாக தெரிவித்தார்.

அத்துடன் காணி மற்றும் வனவள அமைச்சரை விரைவில் கொழும்பில் சந்தித்து இது தொடர்பில் முறையிடவுள்ளதாகவும், காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

அரச அலுவலகங்களிற்கு வழங்கப்பட்ட புதன்கிழமை விடுமுறை இரத்து..!

0

நாட்டில் எரிபொருள் நெருக்கடியால் அரச அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக அத்தியாவசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், அரச சேவைகள் வழக்கமான முறையில் அனைத்து வார நாட்களிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டததி அடுத்து அரச அலுவல்கங்களுக்கு புதன் கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றங்கள் அதிரடியாக நிறுத்தம்..!

0

வட மாகாணத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு மாகாணக் கல்வித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) பிறப்பித்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வட மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக முன் வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து, கடந்த மார்ச் 30ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், ஏப்ரல் 2ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் ஆணைக்குழு ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் படி,
1. ஆட்சேபனைக்குரிய மற்றும் தற்போதைய ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தும் **உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. குறித்த விடயம் தொடர்பான விசாரணை முடிவடைந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை, மேலதிக புதிய இடமாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளக் கூடாது.

இந்த உத்தரவை அடுத்து, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஏற்கனவே வழங்கப்பட்ட இடமாற்ற அறிவுறுத்தல்களை நடைமுறைப் படுத்துவதைத் தவிர்க்குமாறும், மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தத் தடையுத்தரவு காரணமாக, வட மாகாணத்தில் நிலுவையிலுள்ள சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்ப்பு வரும் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!